இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‛விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளார்கள். இதில் சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் பங்கேற்றனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தவர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடம் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோவை இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்.தாணு. தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது இந்த கைதட்டல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சூரி வெளியிட்ட பதிவில் ‛‛நெதர்லாந்த், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது...'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.