மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார்.
ராஜ்கிரண் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காமல் அவரது எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார் பிரியா. இதுதொடர்பாக பிரியா - முனீஸ்ராஜா தம்பதியர் மற்றும் ராஜ்கிரண் இடையே மாறி மாறி சண்டை, சர்ச்சைகள் எழுந்தன. போலீஸில் புகார்கள் எல்லாம் பதிவாகின. 'பிரியா என் மகளே அல்ல' என ராஜ்கிரண் கூறினார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளில் பிரியா - முனீஸ்ராஜா பிரிந்துவிட்டனர்.
இதுதொடர்பாக பிரியா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‛‛2022ல் நானும், முனீஸ்ராஜாவும் திருமணம் செய்தோம். இப்போது நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை வளர்த்த அப்பாவை(ராஜ்கிரண்) ரொம்ப காயப்படுத்தி விட்டேன். ஆனால் எனக்கு பிரச்னை வந்தபோது என்னை காப்பாற்றியது அவர் தான். இது நான் எதிர்பார்க்காத கருணை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.