பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

சென்னை, தரமணியில் இருந்த தமிழக அரசின் பிலிம் சிட்டி தற்போது முழுமையாக செயல்படவில்லை. அங்கு 'டைடல் பார்க்' வந்த பிறகு பிலிம் சிட்டியின் பெரும்பான்மையான இடங்கள் அதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. சில அரங்குகள் மட்டுமே இருந்த நிலையில் அதை யாரும் பயன்படுத்துவதும் இல்லை.
தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவுக்கே முதன்மையான இடமாக இருந்த சென்னையில் தற்போது சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில் சென்னை, பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் அதிநவீன புதிய திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு உள்கட்டமைப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 26ம் தேதி 3 மணிக்குள் டெண்டர்களை சமர்ப்பிக்கவும், அன்று மதியம் 3.30க்கு டெண்டர்களை திறக்கவும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெண்டருக்கு முந்தைய மீட்டிங் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.