இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன் பிறகு காளை, பரதேசி, முனி, சிவலிங்கா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு படத்தில் நடித்துள்ள வேதிகா தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் முதல் முதலாக 'பியர்' என்னும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது 'பியர்' முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நிகழும் என்பதால் நடிப்பிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக உள்ளார். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனுப் ரூபென்ஸ் இசை அமைக்கிறார். ஆன்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷிண்டே என படக்குழுவினர் அனைவரும் மிகவும் அனுபவமிக்கவர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது” என்கிறார்.