தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
மறைந்த இயக்குனர் ராசு.மதுரவன் இயக்கி இருந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்' கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா, பூங்கொடி, புனிதா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருந்தார், சபேஷ் முரளி இசை அமைத்திருந்தனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சண்டையும், பங்காளி பகையும் ஒரு கட்டத்தில் அன்பால் இணைவது மாதிரியான கதை. சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை வசனம் எழுதி கே.பி.ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களில் மணிவண்ணன் தற்போது உயிருடன் இல்லை. அவர்தான் குடும்பத்தின் தலைவர் மாயாண்டியாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.