திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி மற்றும் குணசித்ர நடிகர் பிரம்மானந்தம். விரைவில் தனது ஆயிரமாவது படத்தை தொட இருக்கிறார், தெலுங்கு சினிமாவில் அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் மொழி, சரோஜா, சத்யம், குசேலன், பயணம், லிங்கா, அஞ்சான், வாலு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் தனது சொந்த வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். இதில் அவர் தன் சினிமா வாழ்க்கையை முழுமையாக அதே நேரத்தில் காமெடியாகவும் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. தனது சுயசரிதை புத்தகத்தின் முதல் பிரதியை பிரம்மானந்தம் சிரஞ்சீவிக்கு வழங்கினார்.
இதுகுறித்து சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “பல ஆண்டுகளாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் நடிகர் பிரம்மானந்தம் எனது நெருங்கிய நண்பர் ஆவார். சினிமா துறையில் 40 ஆண்டுகளாக அவர் இருக்கிறார். இந்த 40 ஆண்டுகளில் பிரம்மானந்தம் சந்தித்த மனிதர்கள், அறிமுகங்கள், தெரிந்து கொண்ட விஷயங்கள், பார்க்கும் கோணங்கள், தனக்கு ஏற்பட்ட எத்தனையோ அனுபவங்களை எல்லாம் உள்ளடக்கிய தனது வாழ்க்கையை புத்தமாக எழுதி வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் அனுபவம் மற்றொருவருக்கு பாடம். வழிகாட்டுதலாகவும் ஆகலாம். இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.