இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகிறது. இந்த தொடரின் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐதராபாத் அணியின் உரிமையாளராக நடிகர் ராம் சரணும், மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சனும், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய் குமாரும், பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த வரிசையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ஐஎஸ்பிஎல் டி-10 தொடரில் எங்களது சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார் சூர்யா. அதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.