ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

நடிகர் ரஜினி தற்போது 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கெனவே அங்கு முகாமிட்டிருக்கும் படக்குழு ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி வந்தனர்.
இந்த நிலையில் தனது போர்ஷனில் நடிப்பதற்காக ரஜினி சென்றுள்ளார். நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை. பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே ரஜினி நடித்துக் கொண்டிருப்பது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.