கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
ஒரு காலத்தில் திரைப்படங்கள் குறைந்த தியேட்டர்களில் வெளியாகி அதிக நாட்கள் ஓடின. இந்தக் காலத்தில் அதிகத் தியேட்டர்களில் வெளியாகி குறைந்த நாட்களே ஓடுகின்றன.
நான்கே வாரங்களில் புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் 25 நாட்களைக் கடப்பதும், 50 நாட்களைக் கடப்பதும் அபூர்வமாகிவிட்டது. அப்படியே கடந்தாலும் அவை ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அப்படி ஓடும் படங்களும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டில் ஒரு சில படங்கள் மட்டுமே சில காட்சிகள் ஓடி, 50 நாட்களைக் கடந்துள்ளன. அந்த வரிசையில் 'இறுகப்பற்று' படம் 75வது நாளைக் கடந்துள்ளது. சென்னையில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ஒரே ஒரு காட்சியாக 75வது நாளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற படம் 75 நாளைக் கடந்திருப்பதற்கு படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.