கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படம் நாளை மறுநாள் டிசம்பர் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய அரசுகள் அறிவித்தன.
தெலங்கானாவில் இதுவரை இல்லாத அளவிற்கு டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு முதல் நாள் வசூலாக பெரும் தொகை வசூலாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட 'சலார்' படத்திற்கான கட்டண உயர்வு அதிகம் என்பதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் சற்றே உயர்த்தப்பட்டிருந்தாலும் அங்கும் முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி என்பதால் தெலுங்கில் முதல் நாளில் 'சலார்' வசூல் சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியிலும் படத்திற்கு இது போன்ற வரவேற்பு கிடைத்தால் இந்திய அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது.