பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'சலார்' படம் நாளை மறுநாள் டிசம்பர் 22ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. இப்படத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகிய அரசுகள் அறிவித்தன.
தெலங்கானாவில் இதுவரை இல்லாத அளவிற்கு டிக்கெட் கட்டணத்தை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு முதல் நாள் வசூலாக பெரும் தொகை வசூலாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அங்கு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு உயர்த்தப்பட்ட கட்டணத்தை விட 'சலார்' படத்திற்கான கட்டண உயர்வு அதிகம் என்பதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் சற்றே உயர்த்தப்பட்டிருந்தாலும் அங்கும் முதல் நாள் வசூல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி என்பதால் தெலுங்கில் முதல் நாளில் 'சலார்' வசூல் சாதனை படைக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியிலும் படத்திற்கு இது போன்ற வரவேற்பு கிடைத்தால் இந்திய அளவில் சாதனை புரிய வாய்ப்புள்ளது.