ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் 'இறுகப்பற்று'. அன்றைய தினம் வெளியான 9 படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டுமே தாக்குப் பிடித்து இன்று 25வது நாளைக் கடந்திருக்கிறது.
இது குறித்து படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு, “நன்றி, நன்றி, நன்றி... இறுகப்பற்று படத்திற்குக் கிடைத்த அன்பு… 4 வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் இருப்பதும் எங்கள் குழுவினருக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இது தியேட்டர்களில் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான செயல்பாட்டில் மக்களுக்குச் செய்த விதத்திலும் கிடைத்த வெற்றி. இது போன்ற படங்கள் மில்லியனில் ஒன்று. அதை உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்த இந்த அற்புதமான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்… நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'லியோ' படம் வெளிவந்த பின்னும் இந்தப் படம், தியேட்டர்களில் எந்தவிதமான சத்தமும் ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற படங்களுக்கு வசூல் முக்கியமல்ல, மக்களின் வரவேற்பே முக்கியம்.