''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
கேஜிஎப், காந்தாரா மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தபடம் 'பஹீரா'. ஸ்ரீ முரளி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சூரி இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் முரளிஸ்ரீயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. கேஜிஎப் மற்றும் சலார் பாணியிலான சூப்பர் ஆக்ஷன் ஹீரோ படமாக தயாராகி உள்ளது. படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சப்த சாகரடாச்சே எலோ' (ஏழு கடல்களுக்கு அப்பால்) படத்தில் நடித்து புகழ்பெற்ற ருக்மணி வசந்த் இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகை ஆகிறார்.