ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
கேஜிஎப், காந்தாரா மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தபடம் 'பஹீரா'. ஸ்ரீ முரளி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சூரி இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் முரளிஸ்ரீயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. கேஜிஎப் மற்றும் சலார் பாணியிலான சூப்பர் ஆக்ஷன் ஹீரோ படமாக தயாராகி உள்ளது. படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சப்த சாகரடாச்சே எலோ' (ஏழு கடல்களுக்கு அப்பால்) படத்தில் நடித்து புகழ்பெற்ற ருக்மணி வசந்த் இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகை ஆகிறார்.