துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ரேடியோ மற்றும் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளர் ஆர்.ஜே.விஜய். தற்போது பிரமாண்ட சினிமா விழாக்களில் தொகுப்பாளராக கலக்கி வருகிறார். டான் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் கதை நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை மனம் கொத்திப் பறவை, ஜிப்சி, கழுவேர்த்தி மூர்க்கன், டாடா படங்களை தயாரித்த ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். ஹேமநாதன் என்ற புதுமுகம் இயக்குகிறார். டாடா படத்துக்கு இசையமைத்த ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். மைத்ரேயன், ரெடின் கிங்ஸ்லி, கல்யாணி நடராஜன், மேத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஹேமநாதன் கூறும்போது, “இது கணவன், மனைவி இடையிலான அன்பு, ஈகோ இரண்டையும் சொல்லும் கதை. கணவனாக ஆர்ஜே விஜய், மனைவியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார்கள். கதைப்படி நாயகன் நிகழ்ச்சி தொகுப்பாளர். அதனால் ஆர்.ஜே.விஜையை அந்த கேரக்டரிலேயே நடிக்க வைக்கிறோம். ஹீரோயின் பாடகி. அதனால் அத்தகைய முகவெட்டு, பாடிலாங்குவேஜ் தேவைப்பட்டதால் அஞ்சலி நாயரை நடிக்க வைக்கிறோம். இது பீல் குட் படமாக இருக்கும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை” என்றார்.