சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாணி கதாநாயகியாக நடித்துள்ள ஆண்டனி என்கிற திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை மலையாள சினிமாவின் சீனியர் முன்னணி இயக்குனரான ஜோஷி இயக்கியுள்ளார்.
இதில் ஒரு கல்லூரி மாணவியாக அதேசமயம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையைக் கற்ற ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார் கல்யாணி. படத்தில் இவருக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. இந்த படத்தில் தான் வாங்கிய குத்துகள், உதைகள், ரத்தக்காயங்கள், தான் விட்ட கண்ணீர், அது மட்டுமல்ல தனது புன்னகை எல்லாமே நிஜம்தான் என்று தற்போது கூறியுள்ளார் கல்யாணி.
“எப்போதுமே ஒரு வசதியான சூழலுக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவது வளர்ச்சிக்கு உதவாது என்பதை தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன். படத்தில் என்னுடைய சண்டைக் காட்சிகளின் போது உங்களுடைய ஆரவார கூச்சலும் கைதட்டல்களும் என்னை இன்னும் உற்சாகப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.