கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பிரபலமாக வலம் வந்த சீனியர் நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒன்று கூடி அந்த சந்தோஷத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இதை நடிகைகள் சுகாசினி, லிசி, ராதிகா உள்ளிட்டோர் மாற்றி மாற்றி எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் ரகுமானின் மகள் திருமணத்தின்போது இதேபோன்று எண்பதுகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இதில் நடிகைகள் சுகாசினி, ஷோபனா, ரேவதி, அம்பிகா, நதியா, மேனகா, பார்வதி, ஜெயஸ்ரீ மற்றும் நடிகர்கள் மோகன், பானு சந்தர், பாக்யராஜ், சுந்தர் சி, உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ரகுமானின் மைத்துனரான இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது குறித்த புகைப்படம் ஒன்று தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.