ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
சென்னை: சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்தது. இதனால், அந்த ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள எக்ரட் பார்க் என்ற குடியிருப்பு வளாகத்திற்குள்ளும் புகுந்தது. அங்கு 6 அடி தண்ணீர் நிற்கிறது.
இங்கு தான் நடிகை நமீதா குடியிருக்கிறார். வெள்ளம் 6 அடி அளவுக்கு அவரது வீட்டிற்குள்ளும் புகுந்தது. ஒரு வயதான இரட்டைக் குழந்தைகளுடன் தவித்து வருகிறார். இதுவரை, இங்கு சிக்கி உள்ளவர்களை காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை.
நாராயணபுரம் ஏரி உடைந்ததால், அந்த பகுதியை சுற்றிலும் உள்ள பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. பள்ளிக்கரணை ஆனந்த் நகர் எக்ரட் பார்க்கில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதியில் இருப்பவர்களை மீட்க இதுவரை மீட்பு குழுவினர் வரவில்லை. வயதானவர்கள் சிக்கி கொண்ட நிலையிலும் உதவிக்கு ஒருவரும் வரவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.