நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தமிழ் சினிமாவில் 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். குற்றம் 23, மகாமுனி, ரத்தம், சந்திரமுகி 2 உள்ளிட்ட சில முக்கிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் தான் சந்தித்த அவமானங்களை பற்றி கூறியதாவது : "சினிமாவில் அவமானங்கள் சகஜமானது தான். ஹீரோயின்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு பிறகு மறுப்பது. ஒரு படத்தின் படப்பிடிப்பு பாதி நடந்து முடிந்த பின்பும், ஹீரோயின்கள் நீக்கப்படுவது அதிகம் நடக்கின்றன. எனக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு அழைக்கிறோம் என்றார்கள். ஆனால், அழைக்கவே இல்லை. ஒரு நாள் அந்தப் படத்தின் மேனேஜர் போனில் அழைத்து, அந்தப் படத்தில் பெரிய ஹீரோயின் ஒருவர் நடிக்கின்றார். நீங்கள் இல்லை என கூறினார். நான் நீக்கப்பட்டதற்கானக் காரணம் இன்னும் எனக்கு தெரியவில்லை. பல நடிகைகள் தாங்கள் சந்திக்கும் அவமானங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.