பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
‛லெஜண்ட்' படத்திற்கு பின் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சரவணன். சென்னையில் வணிகர் சங்கம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‛‛எந்த நாட்டில் வியாபாரத்துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் சிறப்பாக இருக்கும். நம் நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் காக்கா, கழுகு கதைகள், பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே உயரலாம். நாம் உயர்ந்தால் நாடும் உயரும்,'' என்றார்.
கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து சமூகவலைதளங்களில் ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வந்தனர். இதுதொடர்பாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதையும், அதற்கு லியோ பட சக்சஸ் மீட்டில் விஜய் தந்த பதில் கதையும் பேசு பொருளானது. இதுகுறித்து தான் சரவணன் இப்படி மறைமுகமாக பேசி உள்ளார்.