ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
தமிழ் சினிமாவில் கதை, ஹீரோக்களை கடந்து பல சமயங்களில் இசை தான் ஹீரோவாகவே மாறியுள்ளது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் போட்டி போட்டு ஹிட் பாடல்களை தருகின்றனர். என்னதான் போட்டி இருந்தாலும் அவ்வபோது ஒரு இசையமைப்பாளர் மற்றொரு இசையமைப்பாளர் இசையில் பாடல்களை பாடுவது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடைபெறும்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளிவந்த 'ஜிகிர் தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர் தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற நவம்பர் 10ந் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்திலிருந்து பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்காக 'தீக்குச்சி' எனும் பாடலை பாடியுள்ளார். யுவனுடன் சந்தோஷ் நாராயணனும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இப்பாடல் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.