புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் விக்ரம் பேசுவதற்கு வசனங்களே இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில் அது குறித்து விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் சூரியநாராயணன் ஒரு விளக்கமளித்துள்ளார்.
அதில், “தங்கலான்' படத்தில் விக்ரம் சாருக்கு வசனங்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு குழப்பம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நிருபர் அவரிடம் படத்தில் உங்களுக்கு வசனங்கள் இல்லையா என்று கேட்டார், அதற்கு விக்ரம், “டீசரில் எனக்கு டயலாக் இல்லை” என ஜோக்காக சொன்னார். 'தங்கலான்' படம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம். படத்தில் அவருக்கு நிச்சயம் டயலாக்குகள் உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.