புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் என்ற ஒற்றை படம் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். நேரம் படத்தையும் இவர் தான் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் தந்த வரவேற்பு அடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‛கோல்டு' படத்திற்கு கிடைக்கவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தின் தோல்விக்காக வருத்தம் தெரிவித்த அல்போன்ஸ் அடுத்த படத்தை அதை சரி செய்வதாக கூறினார்.
தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சினிமா படம் மட்டும் இனி இயக்க மாட்டேன், விலகுவதாக அறிவித்துள்ளார் அல்போன்ஸ். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு பின்னர் நீக்கிய பதிவில், ‛‛தியேட்டர்களுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்த போகிறேன். எனக்கு ‛ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்' குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆனால் தொடர்ச்சியாக ஆல்பம், குறும்படங்கள் மற்றும் ஓடிடி தொடர்பான படங்களை எடுப்பேன். நிச்சயமாக சினிமாவை விட்டு போக மாட்டேன். ஏனென்றால் அதைதவிர எனக்கு வேறு வழியில்லை'' என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.