சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
'தங்கலான்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்கும் அவரது 62வது படத்தை எஸ்யு அருண்குமார் இயக்குகிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை ஒரு 3 நிமிட வீடியோவுடன் ஒரு திரைப்படக் காட்சி போல வெளியிட்டிருந்தார்கள். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அது குறித்து ஒரு ரசிகர் பாராட்டு தெரிவித்து டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், “இந்த முறை இயக்குனர், எழுத்தாளர் எஸ்யு அருண்குமார் மிகச் சிறந்த பர்பெக்ஷனிஸ்ட். அவர் திட்டமிட்டு, படப்பிடிப்பு நடத்தி, இறுதிக்கட்டப் பணிகளையும் சேர்த்து ஒரே வாரத்தில் இதை முடித்துவிட்டார். ஒரு மணி நேர தாமதம் என்பது தயாரிப்பு தரப்பிலும் புரமோஷன் தரப்பிலும் நடந்த ஒன்றுதான். இனி அப்படி நடக்காது,” என இயக்குனர் அருண்குமாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.