ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
மணிரத்னம் இயக்கத்தில் 1987ம்ஆண்டு வெளியான படம் நாயகன். சரண்யா இந்தப் படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்திருந்தனர். தாராவி பகுதியில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த வேலு நாயக்கர் என்ற தாதாவாக கமல் நடித்திருந்தார். இளம் பருவம், நடுத்தர பருவம், முதிய பருவம் என 3 தோற்றங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். பி.சி.ஸ்ரீராம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பெற்றார். சிறந்த கலை இயக்குனருக்கான விருதை தோட்டாதரணி பெற்றார். இந்தப் படம் வருகிற நவம்பர் 3ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது.
இதனை ஏடிஎம் புரொடக்ஷன் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. இது தொடர்பாக படத்தை வெளியிடும் மதுராஜ் கூறும்போது, “பிலிமில் எடுக்கப்பட்ட 'நாயகன்' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியுள்ளோம். ஆடியோ, வண்ணம் ஆகியவையும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 120 திரையரங்குகளிலும், கேரளாவில் 60 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 50 திரையரங்குகளிலும் வெளியிடுகிறோம். பிற ஊர்கள் என மொத்தம் 280 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறோம். ஏற்கெனவே நாங்கள் வெளியிட்ட 'வேட்டையாடு விளையாடு' படம் 3 வாரங்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது” என்றார்.