மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பள்ளிப் பருவ காதல் படமாக உருவாகும் 'நினைவெல்லாம் நீயடா' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஆதிராஜன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். நாயகனாக பிரஜின், நாயகிகளாக மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக பிரஜினும், மனிஷா யாதவும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போல் புகைப்படம் எடுக்க இயக்குனர் ஆதிராஜன் விரும்பியுள்ளார். ஆனால் பிரஜினை முத்தமிட்டு போஸ் கொடுக்க மனிஷா யாதவ் மறுத்துவிட்டார்.
பின்னர் 'வச்சேன் நான் முரட்டு ஆசை எனக்கேதான் மிரட்டும் மீசை' என்ற பாடல் காட்சியை படமாக்கியபோது மீண்டும் மனிஷாவை அணுகி உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடிக்கும்படி வற்புறுத்தினார். அதற்கும் முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என மனிஷா யாதவ் மறுத்துள்ளார். அதற்கு பதிலாக பிரஜின் கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு நடித்துள்ளார். இதனால் மனிஷா மீது இயக்குனர் அதிருப்தியில் உள்ளாராம்.