ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்து தீவிரமாக நடைந்து வருகிறது. இந்த சமயத்தில் இஸ்ரேலில் சிக்கிய பாலிவுட் நடிகை நுஷ்ரத் பரூச்சா சமீபத்தில் பத்திரமாக இந்தியா திரும்பினார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில் வெளியான அகெல்லி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் கதாநாயகனாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஷாய் ஹலேவி என்பவர் நடித்திருந்தார்.
இதற்கு முன்பு இஸ்ரேல் மற்றும் பிரெஞ்ச் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் முதன்முதலாக அகெல்லி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் தனது நாட்டு ராணுவத்தில் இணைந்து ஹமாஸ் போரில் ஈடுபட்டு வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அகெல்லி படத்தின் தயாரிப்பாளர் நினத் வைத்யா உறுதிப்படுத்தியுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறும்போது, “இஸ்ரேலில் தற்போது போர் நிலவரம் தீவிரமாக இருப்பதால் ஷாய் ஹலேவியின் பாதுகாப்பு குறித்து விசாரிக்கும் விதமாக அவரை தொடர்பு கொண்டபோது தனது நாட்டிற்காக ராணுவத்தில் இணைந்து போரில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்” என்று கூறியுள்ளார் ஒரு நடிகர் ராணுவ வீரராக மாறி போரில் பங்கெடுத்து வருவது ஆச்சரியமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது