ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே தமிழகத்தில் ஆரம்பமாக வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனால், இங்கு அதிகாலை காட்சிகள் நடைபெற முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் நடக்கின்றன. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை 6 மணிக்கும் 7 மணிக்கும் முதல் நாள் காட்சிகள் ஆரம்பமாகின்றன.
எனவே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையோரம் இருக்கும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் 'லியோ' படத்தை சீக்கிரமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார்களாம். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு அவற்றைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை.