அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.