ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பஹத் பாசில். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகமாக வித்தியாசமாக இருக்கும். மலையாளம் தாண்டி தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். அதேப்போல் தெலுங்கு சினிமாவில் புஷ்பா படத்திலும் மிரட்டினார். தொடர்ந்து இவருக்கு பன்மொழிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்போது ரஜினியின் 170வது படத்திலும் இவர் இணைந்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் துவங்குகிறது. இதற்காக ரஜினி இன்று(அக்., 3) அங்கு விமானம் மூலம் சென்றார். தொடர்ந்து நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் இன்று ராணாவை தொடர்ந்து பஹத் பாசிலும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.
இந்த படம் சமூகத்திற்கு நல்லதொரு கருத்தை கூறும் படமாக, பிரமாண்டமாய் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.