32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பஹத் பாசில். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகமாக வித்தியாசமாக இருக்கும். மலையாளம் தாண்டி தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். அதேப்போல் தெலுங்கு சினிமாவில் புஷ்பா படத்திலும் மிரட்டினார். தொடர்ந்து இவருக்கு பன்மொழிகளில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்போது ரஜினியின் 170வது படத்திலும் இவர் இணைந்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள 170வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நாளை முதல் துவங்குகிறது. இதற்காக ரஜினி இன்று(அக்., 3) அங்கு விமானம் மூலம் சென்றார். தொடர்ந்து நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதாக அறிவிப்பு வந்த நிலையில் இன்று ராணாவை தொடர்ந்து பஹத் பாசிலும் நடிப்பதாக அறிவித்துள்ளனர். படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.
இந்த படம் சமூகத்திற்கு நல்லதொரு கருத்தை கூறும் படமாக, பிரமாண்டமாய் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.