நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' |
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். தனது அப்பாவை வைத்து 'கோச்சடையான்' என்ற 'மோஷன் கேப்சரிங்' படத்தை இயக்கினார். அடுத்து தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தையும் இயக்கினார். இயக்குனராவதற்கு முன்பாக 2010ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தையும் தயாரித்திருந்தார்.
தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கிறார். அது குறித்து, “நான் உண்மையிலேயே இருந்த இடம் இது. படப்பிடிப்புத் தளத்தில்… அரங்கத்தில்… 2010ல் நான் 'கோவா' படத்தைத் தயாரித்தேன். 13 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில்.. பழைய விஷயம்தான்… ஆனால், இன்னும் புத்திசாலித்தனமாக… கேமரா இன்று ஆரம்பமாகியது. கடவுள் மற்றும் குருக்களின் ஆசியுடன்… முன்னோக்கி… மற்றும் மேல்நோக்கி…”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சவுந்தர்யா தயாரிக்கும் இந்தப் படத்தை நோவா ஆபிரகாம் இயக்க, அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.