ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தபோது சச்சின் சாவந்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நவ்யா நாயரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நவ்யா நாயரிடம் நேற்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்த் தனக்கு நண்பர்தான் என்றும், ஆனால் அவருடன் வேறு விதமான நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சச்சின் சாவந்துடனான நெருக்கம் பற்றிய ஆவணம் கிடைத்தால் நவ்யா நாயர் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.