எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம், வரும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வக்கீல் மற்றும் கணக்கு தணிக்கையாளர் அறிமுகமும் நடைபெறுகிறது. நடிகர் சங்க கட்டட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து கார்த்தி பேசவுள்ளார். கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டடம் கட்டி முடிப்பதற்கு நிதி திரட்டுதல் குறித்து விஷால் கருத்துகளை முன்வைத்து பேசுகிறார்.
நடிகர் சங்க கட்டடம் பாதி கட்டப்பட்ட நிலையில் கட்டுமான பணிகள் முழுமையடையாமல் உள்ளது. இதற்கு இன்னும் ரூ.30 கோடி நிதி தேவை என்று கடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த கூட்டத்தில் கட்டடம் கட்ட தேவையான மீதமுள்ள நிதி திரட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.