மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்றும், குழந்தைகளை இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக இந்த காட்சிகள் அமைந்திருக்கிறது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "எல்லா திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை எப்படி வரைமுறைப்படுத்துவது. மேலும் படம் தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்து மனுதாரருக்கு மாற்று கருத்து இருந்தால் தணிக்கை குழுவிற்கு மனு அனுப்பலாம். இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல மனுதாரர் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.