சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்றும், குழந்தைகளை இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக இந்த காட்சிகள் அமைந்திருக்கிறது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "எல்லா திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை எப்படி வரைமுறைப்படுத்துவது. மேலும் படம் தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்து மனுதாரருக்கு மாற்று கருத்து இருந்தால் தணிக்கை குழுவிற்கு மனு அனுப்பலாம். இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல மனுதாரர் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.