மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சூது கவ்வும் திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், இப்போது தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான போர் தொழில் படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் அசோக் செல்வன் மார்க்கெட் இன்னும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது.
இதன்படி இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை என்கிற இடத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள் நடைபெற இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அநேகமாக செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.