இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் டிஸ்கோ சாந்தி. குடும்ப சூழ்நிலை காரணமாக 1980களில் சினிமாவிற்கு கவர்ச்சி ஆட்டம் ஆட வந்தார். அப்போது டிஸ்கோ நடனம் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தது. அந்த நடனத்தை ஆடியதால் டிஸ்கோ சாந்தி என்று அழைக்கப்பட்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் ஆடினார்.தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஹரி மரணம் அடைந்தார். அதன்பிறகு குடும்ப பொறுப்புகளை டிஸ்கோ சாந்தி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிஸ்கோ சாந்தி தான் தற்போது வருமானம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு அந்த பணத்தில் வாழ்ந்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது கணவர் உயிரோடு இருந்தபோது நிறைய பேருக்கு பணம் கொடுத்திருந்தார். அவர் இறந்த பிறகு நாங்கள் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மட்டுமே என் வீட்டிற்கு வந்தார்கள். எங்களுக்கு பணம் தர வேண்டியவர்கள் யாரும் வீட்டு பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. எங்களிடம் இருந்த நகை, கார், நிலம் எல்லாவற்றையும் விற்று கடனை அடைத்து விட்டோம். ஒரு காருக்கு தவணை கட்ட முடியாமல் வங்கி திருப்பி எடுத்துக் கொண்டது.
இப்போது என்னிடம் அவர் கட்டிய தாலி மட்டுமே மிச்சம் இருக்கிறது. இரண்டு வீடுகள் உள்ளன அந்த வீட்டு வாடகையை வைத்து காலத்தை ஓட்டுகிறோம். சினிமா துறையில் இருந்து யாரும் எங்களை உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட எட்டிப் பார்க்கவில்லை. என்று கூறியுள்ளார்.
டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியும் நடிகை என்பதும், அவர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.