ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
ஈரோடு: கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின், மருத்துவ தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை, நகைச்சுவை நடிகர் பாலா, தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார். ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில், வாகனத்தின் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. எஸ்.பி., ஜவகர் சேவையை துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நடிகர் பாலா கூறியதாவது : கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள, 12 கிராமங்களில், 8,௦௦௦ மக்கள் வசித்து வருகின்றனர். பாம்பு, வன விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ, 16 கி.மீ., துாரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவேண்டும். இதையறிந்த நான், இவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கித்தர எண்ணினேன்.
இதற்காக யாரிடமும் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு கிடைத்த பணத்தை சேர்த்து வாங்கி கொடுத்தேன். இது நான் வாங்கி கொடுத்த இரண்டாவது ஆம்புலன்ஸ் வாகனமாகும். இதேபோல் ஆம்புலன்ஸ் வசதியில்லாத குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு, 10 ஆம்புலன்ஸூகளை எனது சொந்த நிதியில் வாங்கித்தர முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைக்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட செய்யாத பல நல்ல விஷயங்களை பாலா செய்து வருகிறார். இத்தனைக்கும் இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது சுய முன்னேற்றத்தால் உயர்ந்தவர். தனக்கு கிடைக்கும் வருவாயை கொண்டு இந்த உதவிகளை செய்து வருகிறார். விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் அசத்தி வரும் பாலா, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.