இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'வேட்டையன்' எனும் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆன்மிக பயணமாக ரஜினி இமயமலை சென்றுள்ளார். அவர் வந்ததும் ஓரிரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி அதன்பின் தனது 170 படத்தில் நடிக்க போகிறார்.