2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இதில் அமிதாப்பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு 'வேட்டையன்' எனும் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஆன்மிக பயணமாக ரஜினி இமயமலை சென்றுள்ளார். அவர் வந்ததும் ஓரிரு வாரம் ஓய்வெடுக்கும் ரஜினி அதன்பின் தனது 170 படத்தில் நடிக்க போகிறார்.