கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தற்போது முழுநேர அரசியல்வாதியாக இருப்பவர் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள், இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
சித்தூர் மாவட்டம் நகரி புறநகர் மண்டலம் டி.ஆர்.கண்ட்ரிகா கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேசம்மா கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆடி மாத விழாவின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்களை ரோஜா சமர்ப்பித்தார். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். மேலும் கோயிலில் பக்தர்களுக்கு அம்மனின் ஆடி மாதக் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அம்மனை தரிசனம் செய்த அமைச்சர் ரோஜாவுடன் அவரது சகோதரர்கள் ஒய்.ராம்பிரசாத் ரெட்டி, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோயிலில் வேத பண்டிதர்கள் பூர்ணகும்பத்துடன் அமைச்சருக்கு வரவேற்பு அளித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.