மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கேரளாவை சேர்ந்த அதிதி மேனன் தமிழில் அறிமுகமாகி சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார். நடிகர் அபி சரவணன் உடன் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அபி சரவணனை பிரிந்த அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மோகன்லாலுடன் 'பிக் பிரதர் 'படத்தில் நடித்த அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'புர்கா' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் "தலைவர் மற்றும் குழுவினருடன் இந்த ஒரு வருடம் என் வாழ்வின் சிறந்த நேரம். எல்லாம் ஒரு மனிதனுக்காக, லெஜண்ட், தலைவர், சூப்பர் ஸ்டார்” என்று எழுதியுள்ளார் மிர்னா.