இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கேரளாவை சேர்ந்த அதிதி மேனன் தமிழில் அறிமுகமாகி சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார். நடிகர் அபி சரவணன் உடன் நடித்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அபி சரவணனை பிரிந்த அதிதி மேனன் தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக் கொண்டு மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மோகன்லாலுடன் 'பிக் பிரதர் 'படத்தில் நடித்த அவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தார். 'புர்கா' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் "தலைவர் மற்றும் குழுவினருடன் இந்த ஒரு வருடம் என் வாழ்வின் சிறந்த நேரம். எல்லாம் ஒரு மனிதனுக்காக, லெஜண்ட், தலைவர், சூப்பர் ஸ்டார்” என்று எழுதியுள்ளார் மிர்னா.