நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.