மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்ற பாடலை வெளியிட்டனர். அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
ரஜினி தனது மகனை நினைத்து பாடுவது போல் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. என் முகம் கொண்ட என் உயிரே, என் பெயருக்காக பிறந்தவனே, என் குணம் கொண்ட என் உலகே, எவனையும் தாண்டி சிறந்தவனே, எனக்கு பின் என்னை தொடர்பு கொண்டு நீயே, நான் நம்பத் தகுந்த நல்லவன் நீயே, புதல்வா புதல்வா வா, புதல்வா புதல்வா வா போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதுபற்றி குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‛‛ரஜினிக்காக முதல் முறையாக பாடல் எழுதி உள்ளேன். என் குழந்தைகள் உயிர், உலக் ஆகியோருக்கான முதல் பாடலாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற தருணங்களுக்காகவே வாழ்கிறோம். நன்றி நெல்சன், அனிருத்,'' என்றார்.