வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பிரபாஸ் பட இயக்குனர் | பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்க தனுஷ் விருப்பம் | பிளாஷ்பேக்: சிவாஜியின் வசனம், டி எம் எஸ் பேசிப் பாடி, சிறப்பித்த திரைப்படப் பாடல் | குபேரா : தமிழ் டிரைலரை ஓவர்டேக் செய்யும் தெலுங்கு டிரைலர் | லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? |
பாலிவுட்டில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் என இரண்டு தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் கரண் ஜோஹர். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய கரண் ஜோஹர் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாகவும், ஆலியா பட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக 90களில் பார்த்த படங்களின் உணர்வை இது கொடுத்திருப்பதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் டி சர்ட்டின் காலர் நனைந்து ஒரு பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு கண்ணீர் விட்டேன்'' என்று கூறியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்வதி, “எனக்கும் இப்போது ஒரு ராக்கிவாலா தேவைப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.
பார்வதியின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.