பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சுப்பிரமணியபுரம். 15 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளிவந்த போது புதுமுக இயக்குனர், புதுமுக கதாநாயகன் என அதற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது போல 'சுப்ரமணியபுரம்' படத்திற்கும் நாளை காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. இப்படி ஒரு சிறப்புக் காட்சி நடைபெறுவதற்கு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“படம் வெளிவந்த போது எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. காலை காட்சியாக படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் 15 வருடங்களுக்குப் பிறகு நாளை படம் மறுபடியும் வெளியாகும் போது காலை 8 மணி காட்சிக்கு படத்தைத் திரையிடுவது மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்படி ஒரு மரியாதையை 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததே இதற்குக் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாளை காலை சென்னை, கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்கு படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளார்கள்.