புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சுப்பிரமணியபுரம். 15 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளிவந்த போது புதுமுக இயக்குனர், புதுமுக கதாநாயகன் என அதற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது போல 'சுப்ரமணியபுரம்' படத்திற்கும் நாளை காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. இப்படி ஒரு சிறப்புக் காட்சி நடைபெறுவதற்கு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“படம் வெளிவந்த போது எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. காலை காட்சியாக படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் 15 வருடங்களுக்குப் பிறகு நாளை படம் மறுபடியும் வெளியாகும் போது காலை 8 மணி காட்சிக்கு படத்தைத் திரையிடுவது மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்படி ஒரு மரியாதையை 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததே இதற்குக் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாளை காலை சென்னை, கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்கு படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளார்கள்.