நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ரீ-ரிலீஸ் என்பது தற்போது தமிழ் சினிமாவில் டிரெண்ட் ஆக மாறிவிட்டது. 'வேட்டையாடு விளையாடு' படத்திற்குப் பிறகு 15 வருடங்களுக்கு முன்பு வெளியான 'சுப்பிரமணியபுரம்' படம் நாளை ரீ-ரிலீசாகிறது. கிளாசிக் படங்களை மீண்டும் வெளியிடும் இந்த வழக்கம் தற்போது தெலுங்கு சினிமா பக்கமும் போய்விட்டது.
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வாரணம் ஆயிரம்' படம் தெலுங்கில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி அங்கு வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தை நாளை ஆகஸ்ட் 4ல், அங்கு ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆன ஒரு படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். அவற்றிற்கான முன்பதிவும் குறிப்பிடும் அளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையமைப்பில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த '7 ஜி ரெயின்போ காலனி' படத்தின் தெலுங்கு டப்பிங்கான '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தையும் ரி-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். 4 கே மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் படத்தை வெளியிடும் பணி தற்போது நடந்து வருகிறது. விரைவில் வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும் என்று தகவல்.