எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கமல் நடிப்பில் ‛இந்தியன் 2' படத்தையும், ராம் சரண் நடிப்பில் ‛கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும், மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை தழுவி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ராம் சரணை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தை முடித்த பிறகு தான் வேள்பாரி நாவலை தழுவி உருவாகும் படத்தை மூன்று பாகங்களாக பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்குவதற்கு ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.