அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

தமிழ் சினிமா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டது. அதற்கு முன்பு திரைப்படங்களை 'பிலிம்' மூலம்தான் படமாக்கினார்கள். படப்பிடிப்பில் கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்ட பிலிமை லேப்பில் கொண்டு வந்து பிராசசிங் செய்த பின்தான் காட்சிகள் எப்படி பதிவாகியுள்ளது என்பது தெரியும். படத்தொகுப்பு வேலைகளைச் செய்த பின், இசைக் கோர்ப்பு, இதர ஒலி வேலைகளைச் செய்து அவற்றை சவுண்ட் நெகட்டிவ் ஆக தனியாக உருவாக்குவார்கள். முதலில் பிராசசிங் செய்த பிக்சர் நெகட்டிவ்வைத் தனியாகவும், சவுண்ட் நெகட்டிவ்வை தனியாகவும் உருவாக்கி, அதன் பிறகு அவை இரண்டையும் ஒன்றாக்கி பாசிட்டிவ் பிரிண்ட் ஆக மாற்றி அதைப் பிரதி எடுத்து தியேட்டர்களுக்கு அனுப்புவார்கள். அவை புரொஜக்டரில் பொருத்தினால் நமக்குத் திரையில் சினிமா கிடைக்கும். அப்படிப்பட்ட நீண்ட வேலைகள் தற்போதைய டிஜிட்டல் சினிமாவில் இல்லை.
கேமரா மூலம் நேரடியாக ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்தால் அதை அப்படியே கம்ப்யூட்டரில் பொருத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சியைப் பார்க்கலாம். சினிமா என்றாலே பிலிம் தான் என்பது கடந்த பத்து வருடங்களில் இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இப்போதெல்லாம் பிலிம் வடிவில் உள்ள பல திரைப்படங்களை டிஜிட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். அதனால் நெகட்டிவ்களையும், பிலிம்களையும் சேகரித்து வைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால், பாரம்பரிய படத் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் உள்ளிட்ட சிலர் அவர்களது படங்களை பிலிமிலும் சேகரித்து வைத்துள்ளார்கள்.
அப்படி ஏவிஎம் நிறுவனம் தயாரித்த அஜித், சதா நடித்து வெளிவந்த 'திருப்பதி' படத்தின் பிலிம் ரீலை அந்நிறுவனத்தின் வாரிசான அருணா குகன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அப்போதெல்லாம் படத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒவ்வொரு தியேட்டருக்கும் இது போன்று ரீல்கள் அனுப்பப்படும். பெரிய படமாக இருந்தால் 500 பிரிண்ட் எல்லாம் போடுவார்கள். இத்தலைமுறை சினிமா ரசிகர்கள் இது போன்ற பிரிண்ட்டுகளை இனி மியுசியத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
https://twitter.com/arunaguhan_/status/1686604272769900544