பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவராக இருப்பவர் சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம். இவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் சங்கத்தின் பணிகளை செய்ய விடாமல் செயலாளர் மற்றும் பொருளாளர் இடையூறு செய்வதாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், "சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளரை பணி செய்ய விடாமல் தலைவர் ஜாக்குவார் தங்கம் தடுக்ககூடாது. சங்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள் யாரையும் சங்கத்திற்குள் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக யாராவது செயல்பட்டால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அலுவலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.