Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.6 கோடி ரூபாயை கைப்பற்ற முயற்சி : கில்டு தலைவர் புகார்

29 ஜூலை, 2023 - 01:20 IST
எழுத்தின் அளவு:
Attempt-to-capture-Rs.6-crores-:-says-Guild-President

தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை இவற்றைப்போன்று செயல்பட்டு வரும் இன்னொரு அமைப்பு கில்டு என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம். இதன் தலைவராக சண்டை இயக்குனர்ஜாக்குவார் தங்கம் செயல்பட்டு வருகிறார். இவர் தேர்தலை நடத்தாமல் சர்வாதிகார போக்குடன் நடந்து வருவதாக கில்டு உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் புகார் கூறி வருகிறார்கள். இது தொடர்பான வழக்கும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாக்குவார் தங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கில்டில் தற்போது 6 கோடி ரூபாய் பணம் உள்ளது. அதனை கைப்பற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள் என்றார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது. இதுகுறித்து ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்டு செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள் தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது.

2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தை பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன். இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர். நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றனர். ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர்.

என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள். நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது.

வடபழனியில் 13 கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். இதன் மூலம் கில்டு உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்டு பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்தமாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர். சந்தா கட்டமுடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்டு சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம்.

நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது. மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன்" என்கிறார் ஜாக்குவார் தங்கம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் பிரியதர்ஷன்100 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் ... புதிய லுக்கில் ‛அட்டக்கத்தி' தினேஷ் புதிய லுக்கில் ‛அட்டக்கத்தி' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in