சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தெலுங்கில் சாய் ராஜேஷ் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், வைஷ்ணவி சைதன்யா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுலை 14ம் தேதி வெளிவந்த படம் 'பேபி'. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
குடிசைப் பகுதியில் வாழும் ஆனந்த், வைஷ்ணவி இருவரும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். ஆனந்த் பெயில் ஆகிப் போனதால் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். வைஷ்ணவி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் வைஷ்ணவிக்கு விராஜ் என்ற புதிய நண்பர் கிடைக்கிறார். அதன்பிறகு மூவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். உரிமையை விற்றுவிடலாமா அல்லது அந்த மொழிகளில் தாங்களே தயாரிக்கலாமா என தெலுங்கு படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.