ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கில் சாய் ராஜேஷ் இயக்கத்தில், ஆனந்த் தேவரகொண்டா, விராஜ் அஷ்வின், வைஷ்ணவி சைதன்யா மற்றும் பலர் நடிக்க இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜுலை 14ம் தேதி வெளிவந்த படம் 'பேபி'. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
குடிசைப் பகுதியில் வாழும் ஆனந்த், வைஷ்ணவி இருவரும் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலிக்கிறார்கள். ஆனந்த் பெயில் ஆகிப் போனதால் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். வைஷ்ணவி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் வைஷ்ணவிக்கு விராஜ் என்ற புதிய நண்பர் கிடைக்கிறார். அதன்பிறகு மூவரது வாழ்க்கையிலும் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை.
இந்தப் படத்தின் தமிழ், ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். உரிமையை விற்றுவிடலாமா அல்லது அந்த மொழிகளில் தாங்களே தயாரிக்கலாமா என தெலுங்கு படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் யோசித்துக் கொண்டிருக்கிறதாம்.