பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா', இரண்டாவது சிங்கிளான 'ஹூக்கும்' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிய நிலையில் நேற்று மூன்றாவது சிங்கிளான 'ஜூஜூபி' பாடல் வெளியானது.
இரண்டாவது பாடலான 'ஹூக்கும்' பாடலில், “தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா”, “உன் அலும்ப பார்த்தவன்”, “இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு,” போன்ற வரிகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்திற்கு ஆசைப்படும் நடிகர்களை விமர்சித்து அந்தப் பாடல் எழுதப்பட்டது என விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கோபமடைய சமூக வலைத்தளங்களில் வார்த்தை மோதல்கள் ஆரம்பமானது.
ரஜினிகாந்தின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் ஒரே நடிகர் விஜய், விஜய் தான் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என விஜய்யின் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர். அடுத்து நேற்று வெளியான மூன்றாவது பாடலான 'ஜூஜூபி' பாடலில் இடம் பெற்றுள்ள “பகையாகிப் போனா பலியாவ வீணா”, “இவன் ரூட்டே வேறு,”, “கரண்ட்டுல கைய வச்சிபுட்ட, அது தொட்ட உடனே தூக்காமதான் விடுமா உன்னைய,”, “புலிக்கே பசிய தூண்டிபுட்டே அது ரத்தக்காவு வாங்காமத்தான் விடுமா உன்னைய,” ஆகிய வரிகள் யாரை “ஜூஜூபி” என நினைத்து எழுதப்பட்டது என்பது இப்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.
இதனால், நாளை 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.