இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கினார். அதன் பிறகு அவரது விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷாலும் சமீபத்தில் மாணவ மாணவிகளை சந்தித்தார். அப்போது மாணவி ஒருவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது கட்சியில் நீங்கள் இணைவீர்களா? என்று அவரை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு விஷால் கூறுகையில், எல்லாமே கடவுள் கையில் தான் உள்ளது. கடவுளின் முடிவு எதுவாக இருக்கிறதோ அதன்படி நான் செயல்படுவேன். மேலும், அரசியல் என்பது சமூக சேவை மட்டுமே வியாபாரம் அல்ல. நாம் அனைவருமே அரசியலுக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒருவருக்கு 50 ரூபாய் கொடுத்து உதவி செய்தால் கூட அவரும் அரசியல்வாதி தான் என்று அந்த மாணவியின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் விஷால்.