பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.
இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி முகநுால் பக்கம் துவங்கி, பரிசு பொருட்கள் வழங்க போவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இம்மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.