மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.
இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி முகநுால் பக்கம் துவங்கி, பரிசு பொருட்கள் வழங்க போவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இம்மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.