‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சென்னை : நடிகர் ரஜினி பெயரில் போலி முகநுால் பக்கம் துவங்கி, மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அறக்கட்டளையின் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் அளித்த மனு : ரஜினி அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்து வருகிறோம். தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கும், இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.
இந்நிலையில், ரஜினி அறக்கட்டளை பெயரில் சிலர், போலி முகநுால் பக்கம் துவங்கி, பரிசு பொருட்கள் வழங்க போவதாகக் கூறி, பலரிடம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இம்மோசடியில் ஈடுபட்டு வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.




